திங்கள், 20 மே, 2013

..........மாநகர வரவேற்பு ...........

                                      ..........மாநகர வரவேற்பு ...........
... 15 வருடங்களுக்கு முன் ... ஒருஅதிகாலை போழுது,.. 'பொள்ளாச்சி'ல  பிழைக்கத் தெரியாத பையன் எந்த ஊர் போனாலும் பொழைக்க மாட்டான்'  என்ற எங்க ஊர் பழமொழியை பொய்யாக்க புறப்பட்டு சென்னை வந்து இறங்கிய அந்த நாள்  நினைவுகள் ....
... முதல் முதலாக 'மெட்ராஸ்' (கவனிக்கவும் சென்னை..அல்ல ) என்ற மாநகரில் காலடி எடுத்து வைக்கபோகிறோம் என்ற நினைப்பே பயம் கலந்த ஒரு சந்தோஷம்,அதுவும் யாருடைய துணையும் இன்றி ஒரு குருட்டு தைரியத்துடன் தனியாகவே புறப்பட்டு வந்தது.. இதக்கு முன் கோவை வரை மட்டுமே சென்று பழக்கப்பட்ட எனக்கு ஒரு உற்சாகமாக இருந்தது...வெறும் 'நாவல்'களில் வர்ணனையாகவும் , செய்தி தாள்களில் கொட்டை எழுத்துகளிலும் பார்த்த 'மெட்ராஸ்'..
... அப்போது இந்த 'கோயம்பேடு' பஸ் நிலையம் திறக்க பட வில்லை, 'பாரிஸ் ' தான் , '(பிராட் வே) எல்லா பேருந்துகள் நிற்குமிடம், விட்டு வெளிய வந்தால் .. ஒரே இரைச்சல் ..கசகசப்பு.. எங்க ஊர் போல இல்லை .. நான்  ஊரை சொல்லவில்லை,,, மனிதர்கள்.. யாரை பார்த்தாலும் பயமாகவே இருந்தது, முகத்தை ஒரு சிநேகமாக கூடவா வைத்து கொள்ள தெரியாது??? அப்போதே அடி வயிற்றை  கலக்க ஆரம்பித்து விட்டது, ...
"இன்னாபா ஆட்டோ ஒனுமா "... சத்தியமாக அவன் என்ன கேட்கிறான் என்று புரியவில்லை, கூடவே இது தமிழ் தான ? எங்க ஊரில் வாங்க, போங்க  என்று வயது வித்தியாசம் பார்க்காமல் 'இங்க' போட்டு கேட்ட எனக்கு இவர்கள் பேசுவது ஏதோ 'கௌரவ குறைச்சலாக தோன்றியது .  பூ விற்பவர்களும், சைக்கிள் ரிகஷா காரர்கள், ரோடில்லேயே காய்கறி சந்தை .. ஏற்றி இறக்கும் வாகனங்கள்,தங்கள் வாகனத்தின் இரைச்சலை விட அதிகமாக இரையும்  ஓட்டுனர்கள் . "சரியான 'நரகத்துக்கு' தான்  வந்திருக்கிறேன் "...
..சரி .. நான்  வந்த காரணத்தை விவரிக்கவே இல்லையே ... நான் வேலை செய்து வந்த அலுவலகத்தின் புதிய கிளை சென்னையில் தொடங்க ,, அதற்க்கு என்னை இங்கே இடமாற்றம் செய்து விட்டார்கள்...  அலுவலகத்தின் அட்ரஸ் இருக்கிறது ... ஆனால்  யாரிடமும் கேட்க பயமாக இருந்தது... 
' செம்புதாஸ் ' தெரு எப்படிங்க' சார்' போறது?
நான்  'சார்' என்றது ஒரு கண்சிவந்த ஒரு ரிகஷா  காரனை ?( வேறு எப்படி கூப்பிடவும் பயம்).." நேரா போ (?)... சிக்னல் வரும்... லெப்ட் திரும்பிக்கோ .... தர்பார் ஓட்டல்... ரைட் மூணாவது லேபிட்...." ....பேசும்போது காற்றில் மிதந்த வாடை அவன் கண் சிவந்த காரணத்தை விளக்கியது .. தப்பிச்சேன்டா  சாமீ ...

.......
.. ஒரு வழியாக அந்த தெரு(?) வுக்கு வந்து சேர்ந்தேன் .. எங்க ஊர் 'இட்டேரிக்கு ' போகும் பாதை  கூட இன்னும் கொஞ்சம் அகலமாக இருக்கும்.... இருபுறமும் கடைகள்... பிளாஸ்டிக் தடுப்பு போட்டு மறைத்த குடிசை.. எல்லா குடிசை வாசலிலும் ஒரு கை வண்டி.. அதில் அம்மண குண்டியுடன் குழந்தைகள்..ஆடை விலகியது பற்றிய கவலை ஏதுமின்றி  தூங்கும் பெண்கள்... அதற்க்கு காரணமான அவர்கள் கணவர்களின் கலையாத   தூக்கம்.. ஒரு விதமான நாற்றம் ,,. சே .. இது தான்  உங்க மாநகரம?!!! .. திரும்ப ஓடி போயிரலாமா ????...
... வேறு வழி இல்லை,  ரோடோரத்தில் ஒரு கையில் பல் தேய்க்கும் ப்ரஷும் மறுகையில் சாப்பாடு ஆக்கி  கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் விலாசம் கேட்டேன். ( நான்  பார்த்ததில் அதுதான் கொஞ்சம் சுமாராக இருந்தது)....
"புது கம்பெனி பூஜை போடறாங்க அது எங்கே இருக்கு?.....
அவள் தூங்கி கொண்டிருந்த அவள் புருஷனை(?) காலால் ஒரு எத்து எத்தினாள் ...போச்சு .. அவள் புருஷனை எழுப்பி என்னை அடிக்கபோகிறாள்  போல இருக்கிறது, குடி வெறியில் அடித்தால் அடி கன்னா பின்னா  என்று விழுமே என்று நான் தொடை நடுங்க நின்றுகொண்டிருக்கும் போது ,
" இன்னாமே " என்று எழுந்து உட்கார்ந்து 'புளிச் ' என்று துப்பினான், வாந்தி எடுகாதது என் பாக்கியம் .. ..  இந்த 'தம்பி' என்னவோ அட்ரஸ் கேக்குது கொஞ்ச சொல்லேன் "....
அவன் வெறுப்பாய்  ஒரு பார்வை பார்த்தான் ... "இன்னா அட்றஸ் சூ "?
மனைவிமேல் நிறைய பாசம் வைத்திருப்பான் போல !...
அதே கேள்வி அவனிடமும்....
"இன்னா கம்பேனி ?"
"ரப்பர் கம்பெனி "
"லப்பர் கம்பெனி யா "
" ஆமா 'லப்பர்' தான் "...... இது நான்.  ச்சே வந்து ஒரு மணி நேரத்தில் சென்னை தமிழ் என் நாக்கை சொந்தம் கொண்டாடி  விட்டது .
..." கடசியா தெர்து பார் ஒரு பில்டிங் ,, அதுலே செகண்ட் ப்ளோர் "

 ஒரு கையில் பெட்டி , மெதுவாக நடந்து சென்றேன்,  இரு பெண்கள் ஆங்காரமாக கத்தி கொண்டிருந்தார்கள்.. எனக்கே மெதுவாக சுவாரஸ்யம் தட்ட ஆரம்பித்து விட்டது, நடையை குறைத்து அவர்கள் சண்டையை வேடிக்கை பார்க்க தொடங்கினேன்,..
போடி தே ......
.நீ  தாண்டி தே ....
உன் யோகியதை தான் சிரிப்பா  சிரிக்குதே .....
 நீ  ஊர்மேல போன கதையே எடுத்து விட்டேன்னா  நாறி போயிரும்..".தே ...."
"என் புருஷன் எந்திரிகட்டும்  உன் ."............".லே தாளிக்க  வைக்கிறேன் !!"
" என் புருஷன் எந்திரிகட்டும் ......................"    என்ன இவர்கள்?,, இவர்கள் புருஷன் என்ன 'தாளிக்க  போகிறான் ?... சமையல் செய்வது இவர்கள் தானே?....அவன் ஏன் தாளிக்க மட்டும் வருகிறான்?........ ஆனால்  இன்னும் ஒரு 5 நிமிடம் கேட்டபோது தான்  புரிந்தது ... இவள் அவளின் பிறப்புறுப்பின் பெருமையையும், அதன் வலிமையையும் அதன் செயல்பாட்டையும், புக்ழ் ... அதே போல அவளும் இவளுடையதை பற்றியும் பல அரிய பெரிய உண்மைகளை பறைசாற்றி கொண்டிருக்கிறார்கள் என்று. .ஒன்று மட்டும் தெரிந்தது ,. பிரம்மன் வெறும் மனித தசைகளால் இவர்கள் இருவருக்கும் 'அதை' உருவாக்கி கொடுத்திருக்க முடியாது ,, அதைவிட வலிமை பொருந்திய ஏதோ ஒரு விசேஷ பொருட்களில் தான்  அதை உருவாக்கி இருக்க வேண்டும்.
.
...சண்டையை பார்த்த மும்முரத்தில் நான் அங்கேயே  நின்று விட்டதை உணர்ந்து அவசரமாக விலக முயற்சித்தபோது அதில் ஒரு பெண் என்னை பார்த்தாள் ... கையில் பெட்டியுடன்.. ஆ என்று அவர்கள் வாயையே பார்த்து நின்ற என்னை வித்தியாசமாக தோன்றி இருக்க வேண்டும்....
 .....

" தே ... இங்க வா ".... போச்சு.. இனி மிச்சம் மீதி எல்லாம் நான் வாங்கி கட்டிக்க போறேனா?.... சாத்தியமாக  அவள் இதுவரை பிரயோகித்த வார்த்தைகளில் பத்தில் ஒரு பங்கை நான் கேட்டாலே அங்கேயே தூக்கு போட்டு தொங்கும் மன நிலையில் இருந்தேன்...
.. மெல்ல தயங்கி தயங்கி அருகில் சென்றேன் !.... பாதை தெரியாத ஊரில் ஓடவா  முடியும்...ஆனால் அதற்க்கு பின்னால் நடந்ததை இப்போதல்ல எப்போதும் மறக்க முடியாது!!!
... அருகில் வந்த என்னை ஏற இறங்க பார்த்தாள் ...
"  .ஏம்ப்பா.... உன் "பூ ........" எடுத்து அவ வாயில  வை ... அடங்கறளானு  பாரு தே ...."
" ஏன்  என் வாயில வைக்க சொல்லேற " கொழுபெடுதவ நீ...  நீ வச்சிக்கடி தே ..... "
..... நான்  அரண்டு போய்விட்டேன்...  என்ன இது ?....... இதற்காகத்தான் நான்  இவ்வளவு தூரம் வந்தேன்னா ?.... 'என்'னுடையதுக்கு இப்படி ஒரு உபயோகமா ? .... தூ .... இவளுக ஏலம்  போட  என்'னுடையது தான் கிடைத்ததா ?...ஆண்டவா ???
.....
ஒரு கையில் பெட்டியை வைத்துகொண்டு , மறு கையில் என்னை அறியாமலேயே கையை வைத்து மறைத்து கொண்டு விறு விறு என்று நடந்தேன்....என்னையும் ,..நான்  நடந்த கோலத்தையும்  பார்த்து அதில் ஒருத்திக்கு என்ன தோன்றியதோ வாய்விட்டு சத்தம போட்டு சிரிக்க ஆரம்பித்தது எனக்கு கேட்டது, ..கூடவே மற்றவளும்... அடி போங்கடி .....
கம்பெனி வாசலில் வந்து திரும்பி பார்த்தேன், சனியன்கள் ரெண்டும் விழுந்து, விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள் .................!!!!!

...
......அலுவலகம் சென்றும் விதி என்னை விடவில்லை... என்னை ஒரு மேஸ்த்ரி( கூலிகளின் தலைவன் ) எனக்கு ஒரு லாட்ஜ்   காட்ட அழைத்து சென்றான் .. போகும் வழியில் கேட்டான் .." நாஸ்டா "  பண்ணிட்டியா ?
" ஓ .. பஸ் ஸ்டாண்ட் ல பஸ்ஸ  விட்டு இறங்கன உடனே  போய்ட்டு வந்துட்டேன் !"
புரியாமல் பார்த்தவன் மீண்டும் சொன்னான்...
"இங்கே நல்லா இருக்கும் "... சரவண பவன் ஓட்டலை காட்டினான் ...
லேசாக குழப்பம் மெதுவாக கேட்டேன்" நீ என்ன கேட்ட?"
".நாஸ்டா பா !நாஸ்டா"... காலைல துன்னியானு கேட்டேன் " .... பாவி சாபிட்டாய என்று கேட்டு இருக்கிறான் ..
நல்ல வேளை  நான்  அவனிடம் சொல்லவில்லை .." நாஸ்டா பண்ணுவது " என்றால் சென்னை பாஷையில்  "டாய்லெட்" போவது என்று உத்தேசமாக நான்  யூகித்து வைத்திருந்தேன் என்று............!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக